search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்
    X
    கவர்னர் பன்வாரிலால் புரோகித்

    தமிழ் புத்தாண்டு- தலைவர்கள் வாழ்த்து

    வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளிகூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும் என்று தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    நாளை தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி- தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    மலரும் இப்புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்:-

    தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒரு புத்தாண்டின் விடியல் ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கிறது.

    கொரோனா தொடர்பான அரசாங்க வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதன் மூலம் திருவிழாவை கொண்டாட தமிழக மக்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

     புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

    தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    தமிழ் புத்தாண்டு சித்திரை 1, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளிகூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்ற இந்த நேரத்தில் உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்று நோயை வென்றிடவும் இப்புத்தாண்டு நமக்கு வழிவகுக்கட்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநா யக கட்சி நிறுவனர் பாரி வேந்தர், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், வி.ஜி.பி. நிறுவன தலைவர் வி.ஜி.சந்தோசம், இயேசு அழைக்கிறார் நிறுவனர் பால்தினகரன், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திருநாவுக்கரசர் எம்.பி., இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×