என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்
Byமாலை மலர்12 April 2021 12:26 PM GMT
கொரோனா அச்சறுத்தலை கருத்தில் கொண்டு, ஆதார்-பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆதார் - பான் கார்டு இணைப்புக்கான நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 31ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், கொரோனா அச்சறுத்தலை கருத்தில் கொண்டு, ஆதார்-பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் ஜூன் 30க்குள் இணைக்காவிட்டால் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் அபராதம் செலுத்த நேரிடும். அத்துடன், பான் கார்டும் செயல்படாது. எனவே, விரைவில் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டியது அவசியமாகிறது.
வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற முகவரியில் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X