search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

    பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2000 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கோவை:

    கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அமிர்தலிங்கம், சீனிவாசன், கணேசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2000 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×