search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவையாறு அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிப்பு

    திருவையாறு அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவையாறு:

    திருவையாறு அடுத்த அம்மன்பேட்டை வடக்கு வெள்ளாளத்தெருவை சேர்ந்தவர் ரெத்தினகுமார் (55), விவசாய கூலி. இவருக்கு லெட்சுமி (41) என்ற மனைவியும், வீரமணி (21) என்ற மகனும், அமர்தவர்சினி (8) என்ற மகளும் உள்ளனர்.

    இரவு வீட்டு ஹாலில் படுத்திருந்தனர். அப்போது 2 மர்மநபர்கள் வீட்டின் கதவை கம்பியால் நெம்பி திறந்து உள்ளே புகுந்து லெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனராம்.

    இதுகுறித்து நடுக்காவேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. சித்திரவேல், நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    வீரமணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×