search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வாணியம்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி - வாக்களிக்க வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

    வாணியம்பாடி அருகே வாக்களிக்க வந்த வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த பெரியபேட்டை அருகே உள்ள அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மகன் யுவராஜ் என்கிற ரமேஷ் (வயது 26). ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தேர்தலில் வாக்களிக்க தனது சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்த நிலையில் வாணியம்பாடி-கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும் போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    Next Story
    ×