search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஆண்டிபட்டியில் கீழே தவறி விழுந்து தொழிலாளி பலி

    ஆண்டிபட்டியில் சுமைதூக்கும் தொழிலாளி கீழே தவறிவிழுந்து பலியானார்.
    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே கொண்டம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி(48). இவர் ஆண்டிபட்டியில் உள்ள பார்சல் சர்வீசில் சுமைதூக்கும் கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று தனியார் மகால் அருகே மூர்த்தி தவறிவிழுந்து காதில் ரத்தம் படிந்த நிலையில் உள்ளதாக அவரது மகன் முகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நண்பர்களுடன் தனது தந்தையை மீட்டு ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தேனி மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த மூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி(48). சலூன்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் திருமணமாகி தேனியில் வசித்து வருகிறார். சில நாட்களாக வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி சுந்தராம்பாள் மகனுடன் தங்கியிருந்தனர். இந்த நிலையில் வேலுச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் மதுவுடன் வி‌ஷம் கலந்து குடித்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வேலுச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து ராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×