என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பொய் வழக்கு பதிந்ததாக கூறி ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்த ஊராட்சி தலைவர்
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் திருப்பதிவாசகன்(49). இவர் 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்க செயலாளராகவும், ரெங்கநாதபுரம் முன்னாள் ஊராட்சி தலைவராகவும் இருந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 18-ம் கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள புளியமரத்தில் தூக்குமாட்டிய நிலையில் திருப்பதிவாசகன் இறந்துகிடந்தார். இதுகுறித்து கோம்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே திருப்பதிவாசகன் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நண்பர்கள் மற்றும் போலீசாருக்கு ஒரு ஆடியோ பதிவை அனுப்பி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
எனக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி என்மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த உண்மையும் இல்லை. முறையான விசாரணை நடத்தப்படவில்லை. எனவே என்மீது புகார் தெரிவித்த பெண்ணின் செல்போனையும், எனது செல்போனில் உள்ள உரையாடல்களையும் சைபர்கிரைம் போலீசார் வைத்து விசாரணை நடத்த வேண்டும்.
என்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு காரணமாக மன அழுத்தத்தில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இருந்தபோதும் எனக்கு எதிரான பொய்புகாரில் உண்மை இல்லை என்பதை போலீசார் நிரூபிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்