search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவையில் 315 பேருக்கு கொரோனா

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 153-ஆக உயர்ந்துள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் நேற்று 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 153-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு பின்னர் நேற்று 300 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    இதுதவிர கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 146 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 57 ஆயிரத்து 266 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×