search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை கைதிகள்
    X
    சிறை கைதிகள்

    திருச்சி மத்திய சிறையில் ஓட்டு போட விரும்பாத கைதிகள்

    திருச்சி மத்திய சிறையில் சுமார் 210 கைதிகள் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 கைதிகள் தபாலில் ஓட்டுபோட தகுதி பெற்று இருந்தனர்.
    திருச்சி:

    திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகளுக்கு ஓட்டு போடும் உரிமை கிடையாது. ஆனால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மட்டும் ஓட்டு போடலாம். அதிலும் குண்டர் சட்ட கைதிகளுக்கு மற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடாது. வழக்கு நிலுவையில் இருந்தால் அவர்களுக்கும் ஓட்டு போட அனுமதியில்லை.

    அந்த வகையில் திருச்சி மத்திய சிறையில் சுமார் 210 கைதிகள் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 கைதிகள் தபாலில் ஓட்டுபோட தகுதி பெற்று இருந்தனர். ஆனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் கைதிகள் 21 பேரும் தபால் ஓட்டு போட விரும்பவில்லை என தெரிவித்துள்ளதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.
    Next Story
    ×