என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கராபுரம் தொகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்
Byமாலை மலர்24 March 2021 2:19 PM GMT (Updated: 24 March 2021 2:19 PM GMT)
சங்கராபுரம் தொகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி உதவி பொறியாளர் அண்ணாதுரை தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டு பிரபு ஆகியோரை கொண்ட பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.வி.பாளையம் கிராம சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சங்கராபுரம் தாலுகா, புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சரவணன் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சரவணனிடம் இருந்து ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் அதை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேலிடம் ஒப்படைத்தனர். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சையத்காதர் உடன் இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X