என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சைதாப்பேட்டையில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்24 March 2021 2:38 AM GMT (Updated: 24 March 2021 2:38 AM GMT)
சைதாப்பேட்டையில் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலாஜி (வயது 50). இவர் மயிலாப்பூர் போக்குவரத்து காவல் பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலாஜி நேற்று முன்தினம் பணிக்கு சென்று வந்த பின்னர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், பாலாஜி சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பணிச்சுமையா? குடும்ப பிரச்சினையா? அல்லது உடல் நலக்குறைவா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலாஜி (வயது 50). இவர் மயிலாப்பூர் போக்குவரத்து காவல் பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலாஜி நேற்று முன்தினம் பணிக்கு சென்று வந்த பின்னர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், பாலாஜி சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பணிச்சுமையா? குடும்ப பிரச்சினையா? அல்லது உடல் நலக்குறைவா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X