search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தற்போது 113 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 474-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 22 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 137. தற்போது 113 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 224 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
    Next Story
    ×