என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூரில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனை
Byமாலை மலர்2 March 2021 6:22 PM GMT (Updated: 2 March 2021 6:22 PM GMT)
கரூரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மொத்தம் 18 பறக்கும் படை குழுக்களும், 18 நிலையான கண்காணிப்புக்குழுக்களும், 4 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும் மற்றும் 4 கணக்கீட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கரூர் தொகுதியில் 6 பறக்கும்படை குழுக்களும், 6 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் கரூரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒருபகுதியாக நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி தமிழ்ச்செல்வி தலைமையில், திருமாநிலையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, முழுமையான சோதனை செய்தனர்.
அதேபோல் வெங்கக்கல்பட்டி, ஈரோடு சாலை உள்ளிட்ட கரூரில் பல்வேறு பகுதிகளில் இக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மொத்தம் 18 பறக்கும் படை குழுக்களும், 18 நிலையான கண்காணிப்புக்குழுக்களும், 4 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும் மற்றும் 4 கணக்கீட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கரூர் தொகுதியில் 6 பறக்கும்படை குழுக்களும், 6 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் கரூரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒருபகுதியாக நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி தமிழ்ச்செல்வி தலைமையில், திருமாநிலையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, முழுமையான சோதனை செய்தனர்.
அதேபோல் வெங்கக்கல்பட்டி, ஈரோடு சாலை உள்ளிட்ட கரூரில் பல்வேறு பகுதிகளில் இக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X