search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் திருமாநிலையூர் பகுதியில் வாகன சோதனை நடந்தபோது எடுத்த படம்.
    X
    கரூர் திருமாநிலையூர் பகுதியில் வாகன சோதனை நடந்தபோது எடுத்த படம்.

    கரூரில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனை

    கரூரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    கரூர்:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மொத்தம் 18 பறக்கும் படை குழுக்களும், 18 நிலையான கண்காணிப்புக்குழுக்களும், 4 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும் மற்றும் 4 கணக்கீட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கரூர் தொகுதியில் 6 பறக்கும்படை குழுக்களும், 6 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவினர் கரூரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒருபகுதியாக நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி தமிழ்ச்செல்வி தலைமையில், திருமாநிலையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, முழுமையான சோதனை செய்தனர்.

    அதேபோல் வெங்கக்கல்பட்டி, ஈரோடு சாலை உள்ளிட்ட கரூரில் பல்வேறு பகுதிகளில் இக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
    Next Story
    ×