search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனிவாசகம்
    X
    சீனிவாசகம்

    கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

    கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டராக திடீரென மரணம் அடைந்தார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சீனிவாசகம் (வயது 56). இவர் நேற்று காலையில் திடீரென்று மரணம் அடைந்தார். இதையடுத்து கோவில்பட்டி ராஜீவ்நகரில் உள்ள வீட்டில் சீனிவாசகம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினார்கள்.

    சீனிவாசகத்துக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், தீபிகா என்ற மகளும், மாரீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.
    Next Story
    ×