என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலி அமெரிக்க டாலர் நோட்டுகளை மாற்ற முயன்ற திருப்பூர் பனியன் வியாபாரி கைது
Byமாலை மலர்1 March 2021 10:47 PM GMT (Updated: 2 March 2021 10:11 AM GMT)
போலி அமெரிக்க டாலர் நோட்டுகளை மாற்ற முயன்ற திருப்பூர் பனியன் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் நாதன் இட்சகு (வயது 41). இவர் திருப்பூரில் பல ஆண்டுகளாக பனியன் வியாபாரம் செய்து வருகிறார். இவர், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று அமெரிக்க டாலர் நோட்டுகளை கொடுத்து இந்திய ரூபாய் கொடுக்குமாறு கேட்டார்.
அங்கு வேலையில் இருந்த பாலச்சந்திரன் என்பவர் டாலர் நோட்டுகளை பார்த்த போது அது போலியானது என்பதை கண்டறிந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் விரைந்து வந்து நாதன் இட்சகுவை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடமிருந்த போலி அமெரிக்க டாலர் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியா சென்றுவிட்டு கோவை வந்ததாகவும், தன்னிடம் இருந்தது போலி அமெரிக்க டாலர் நோட்டுகள் என்று தெரியாது என்றும் கூறி உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து நாதன் இட்சகுவை போலீசார் கைது செய்தனர்.
நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் நாதன் இட்சகு (வயது 41). இவர் திருப்பூரில் பல ஆண்டுகளாக பனியன் வியாபாரம் செய்து வருகிறார். இவர், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று அமெரிக்க டாலர் நோட்டுகளை கொடுத்து இந்திய ரூபாய் கொடுக்குமாறு கேட்டார்.
அங்கு வேலையில் இருந்த பாலச்சந்திரன் என்பவர் டாலர் நோட்டுகளை பார்த்த போது அது போலியானது என்பதை கண்டறிந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் விரைந்து வந்து நாதன் இட்சகுவை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடமிருந்த போலி அமெரிக்க டாலர் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியா சென்றுவிட்டு கோவை வந்ததாகவும், தன்னிடம் இருந்தது போலி அமெரிக்க டாலர் நோட்டுகள் என்று தெரியாது என்றும் கூறி உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து நாதன் இட்சகுவை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X