என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தினருடன் தர்ணா
Byமாலை மலர்25 Feb 2021 11:19 AM GMT (Updated: 25 Feb 2021 11:19 AM GMT)
நெல்லை அருகே 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக வண்ணார்பேட்டையில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு, விற்பனை நேரம் குறைப்பு என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
கூட்டு நடவடிக்கைக்குழு செயலாளர் சரவண பெருமாள் தலைமை தாங்கினார். தொ.மு.ச. துணைச்செயலாளர் பால கிருஷ்ணன் வரவேற்றார்.
தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சடையப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தில் நிர்வாகிகள் சந்திரன், சிவன்ராஜ், சாஸ்தா, ஜெய்கணேஷ், கைக்கொண்டான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X