என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அழகான தமிழ் மொழியில் பேச முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்: ராஜ்நாத் சிங்
Byமாலை மலர்21 Feb 2021 11:50 AM GMT (Updated: 21 Feb 2021 11:50 AM GMT)
தமிழில் பேச முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என சேலம் இளைஞர் அணி மாநாட்டில் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தமிழக பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு இளைஞர் அணி மாநில தலைவர் பி.செல்வம் தலைமை தாங்கினார்.
இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில தலைவர் எல்.முருகன், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் ரவி, இளைஞர் அணிதேசிய தலைவர் தேஜஸ்விசூர்யா வினோஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது ‘‘நான் தமிழில் அதிகமாக பேச விரும்புகிறேன். அழகான மொழியான தமிழில் பேச முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.’’ என்றார்.
மேலும், ‘‘கொரோனா காலத்திற்குப்பின் நாம் இந்தியாவின் அடுத்த வளர்ச்சிக்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறோம். நாளுக்குநாள் நமது நாட்டில் வெளிநாட்டு முதலீடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாட்டின் பங்கு சந்தை ஜம்பிங் மட்டும் செய்யவில்லை. ஜல்லிக்கட்டு போல் விளையாடிகிறது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X