என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலக்கோடு அருகே ஆடு திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்20 Feb 2021 11:55 AM GMT (Updated: 20 Feb 2021 11:55 AM GMT)
பாலக்கோடு அருகே ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே சீங்கேரி பகுதியை சேர்ந்தவர் முத்தப்பன் (வயது 52). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு ஆட்டை விற்பனை செய்வதற்காக பாலக்கோடு அருகே மேக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொண்டு வந்து கட்டி வைத்து இருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்த போது ஆடு திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பாலக்கோடு பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சந்தோஷ்குமார் (22) என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆட்டை மீட்டு முத்தப்பனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X