என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில் மூடப்பட்டதை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Byமாலை மலர்17 Feb 2021 4:49 PM GMT (Updated: 17 Feb 2021 4:49 PM GMT)
ஏழைப் பிள்ளையார் கோவில் வாய்க்கால் சீரமைப்பு பணிகளின்போது மண்ணால் மூடப்பட்டதை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி:
திருச்சி வரகனேரி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஏழைப் பிள்ளையார் கோவில் வாய்க்கால் சீரமைப்பு பணிகளின்போது மண்ணால் மூடப்பட்டது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் அந்த பகுதியில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் அறிவிப்பு பலகை வைத்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்தும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாரதீய ஜனதா கட்சியின் பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் காந்தி மார்க்கெட் போலீசார் அங்கு வந்து அவர்களை அழைத்து சென்றனர். இது சம்பந்தமாக இன்று(புதன்கிழமை) கள ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என போலீசார் அளித்த உறுதியை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X