என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் மாவட்டத்தில் கால்நடைகள் பயன்பெறும் வகையில் 88 மருந்தகங்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
Byமாலை மலர்17 Feb 2021 11:08 AM GMT (Updated: 17 Feb 2021 11:13 AM GMT)
கரூர் மாவட்டத்தில் கால்நடைகள் பயன் பெறும் வகையில் 88 மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர்:
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட எஸ்.வெள்ளாளப்பட்டியில் உள்ள கால்நடை கிளை நிலையத்தை தரம் உயர்த்தி புதிய கால்நடை மருந்தக கட்டிடம் கட்டப்பட்டது. இதனை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பெருக விலையில்லா ஆடு மற்றும் கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன்படி, கரூர் மாவட்டத்தில் 2020-21-ம் நிதியாண்டில் 400 பயனாளிகளுக்கு 400 கறவை மாடுகளும், 2,476 பயனாளிக்கு தலா 4 ஆடுகள் வீதம் 9,904 ஆடுகளும், 3,200 பயனாளிகளுக்கு தலா 25 கோழிகள் வீதம் 80 ஆயிரம் கோழிகளும் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் தேசிய ஆடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் 270 பயனாளிகளுக்கு தலா 11 ஆடுகள் வீதம் 2,970 ஆடுகளும்வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 93 ஆயிரம் மாடுகள் மற்றும் எருமைகளும், 4 லட்சத்து 90 ஆயிரம் செம்மறி மற்றும் வெள்ளாடுகளும், 24 லட்சம் கோழிகளும் வளர்க்கப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் கிராமங்கள்தோறும் கால்நடை பாதுகாப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கரூர் மாவட்டத்தில் 73 கால்நடை மருந்தகங்களும், 12 கால்நடை கிளை நிலையங்களும், 3 கால்நடை மருத்துவமனைகளும் என மொத்தம் 88 மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவசர காலங்களில் சிகிச்சை அளிக்க அம்மா கால்நடை ஆம்புலன்ஸ் வசதியும் செயல்பட்டு வருகின்றது. எஸ்.வெள்ளாளப்பட்டி பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தின் மூலம் சுமார் 5 ஆயிரம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் கீதா எம்.எல்.ஏ., கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X