என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும்- சுற்றுலா பயணிகள் கோரிக்கை
Byமாலை மலர்17 Feb 2021 9:31 AM GMT (Updated: 17 Feb 2021 9:31 AM GMT)
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அம்பை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மணிமுத்தாறு அருவியும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் ஆண்டு தோறும் தண்ணீர் விழும். இந்த அருவிகளில் குளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
கொேரானா ஊரடங்கை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் இந்த அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். கொரோனா ஊடரங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த 2 அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதி கிடைக்காததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்து உள்ளனர். ஆனால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியில் உள்ளனர். எனவே மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மணிமுத்தாறு அருவியும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் ஆண்டு தோறும் தண்ணீர் விழும். இந்த அருவிகளில் குளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
கொேரானா ஊரடங்கை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் இந்த அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். கொரோனா ஊடரங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த 2 அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதி கிடைக்காததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்து உள்ளனர். ஆனால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியில் உள்ளனர். எனவே மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X