search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்த முன்னாள் தீயணைப்பு அதிகாரியின் வீட்டை படத்தில் காணலாம்.
    X
    தஞ்சையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்த முன்னாள் தீயணைப்பு அதிகாரியின் வீட்டை படத்தில் காணலாம்.

    தஞ்சையில் முன்னாள் தீயணைப்பு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    தஞ்சையில் முன்னாள் தீயணைப்பு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர் சங்கேந்தி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது61). இவர் திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றினார். இவர் மீது வவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் ஓய்வு பெறுவதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி தஞ்சையில் பணியாற்றிய போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சிந்தாமணி குடியிருப்பில் உள்ள ரவிச்சந்திரனின் வீட்டில் நேற்று பிற்பகல் முதல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர். இதே போல் தஞ்சை அம்மாகுளத்தில் உள்ள ரவிச்சந்திரனின் மற்றொரு வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
    Next Story
    ×