என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிநீர் குழாய் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் - ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
Byமாலை மலர்28 Jan 2021 11:37 PM GMT (Updated: 28 Jan 2021 11:37 PM GMT)
விருமாண்டம்பாளையம் குடிநீர் குழாய் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்குளி:
செங்கப்பள்ளியிலிருந்து குன்னத்தூர் செல்லும் பிரதான சாலையில் விருமாண்டம்பாளையம் ஊராட்சி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தில்லைகுட்டைபாளையம் பகுதியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. கால்வாய் அமைத்த நாள் முதல் கழிவுநீர் செல்லாமல் இப்பகுதியில் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் மற்றும் கிருமிகள் கழிவு நீரில் இருப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கால்வாய் செல்லும் வழியில் செடிகள் முளைத்து புதர் போல் காணப்படுகிறது.
போதிய அளவு துப்புரவு பணியாளர் இல்லாத காரணத்தினால் கழிவுநீர் வடிகால் நீண்ட நாட்களாக சுத்தம் செய்ய முடியாத நிலையில் ஊராட்சி நிர்வாகம் உள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்கும் கால்வாய்க்கு அருகிலேயே பொதுமக்கள் குடிநீர் உபயோகத்திற்கு பயன்படும் குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் இங்கு தேங்கி இருப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காதவாறு சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கப்பள்ளியிலிருந்து குன்னத்தூர் செல்லும் பிரதான சாலையில் விருமாண்டம்பாளையம் ஊராட்சி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தில்லைகுட்டைபாளையம் பகுதியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. கால்வாய் அமைத்த நாள் முதல் கழிவுநீர் செல்லாமல் இப்பகுதியில் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் மற்றும் கிருமிகள் கழிவு நீரில் இருப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கால்வாய் செல்லும் வழியில் செடிகள் முளைத்து புதர் போல் காணப்படுகிறது.
போதிய அளவு துப்புரவு பணியாளர் இல்லாத காரணத்தினால் கழிவுநீர் வடிகால் நீண்ட நாட்களாக சுத்தம் செய்ய முடியாத நிலையில் ஊராட்சி நிர்வாகம் உள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்கும் கால்வாய்க்கு அருகிலேயே பொதுமக்கள் குடிநீர் உபயோகத்திற்கு பயன்படும் குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் இங்கு தேங்கி இருப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காதவாறு சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X