search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருச்செந்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூதன போராட்டம்

    திருச்செந்தூர் அருகே சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் - பரமன்குறிச்சி சாலையில் ராமசாமிபுரம் அருகில் மழையால் சேதம் அடைந்த சாலையில் குளம் போல் தேங்கி உள்ள தண்ணீரால் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் உள்ள மழை நீரை அப்புறப்படுத்தி, சாலையை விரைவில் சரிசெய்ய வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவை சார்பில் மழைநீர் தேங்கி உள்ள சாலையில் காகித கப்பல் விடும் நூதன போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி தலைமை தாங்கினார். கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல்முத்து, உடன்குடி ஒன்றிய பொருளாளர் ஜான்வளவன், திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர்கள் கண்ணன், செஞ்சுடர், சமூக ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் நடுவை பெருமாவளவன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துக்குமார், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் பேச்சிமுத்து, ஒன்றிய அமைப்பாளர் வல்லரசு, தொண்டரணி ஒன்றிய துணை அமைப்பாளர் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×