என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானலில் மசாஜ் சென்டரில் பணிபுரிந்த பெண் தற்கொலை- காதலனிடம் விசாரணை
Byமாலை மலர்20 Jan 2021 6:55 AM GMT (Updated: 20 Jan 2021 6:55 AM GMT)
கொடைக்கானலில் மசாஜ் சென்டரில் பணிபுரிந்த பெண் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அவரது காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகள் மேரி (வயது24). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொடைக்கானலில் மசாஜ் சென்டருக்கு வேலைக்கு வந்தார்.
அதே சென்டரில் வேலை பார்த்து வந்த சுபீஷ் (வயது28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்யாமலேயே ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு அவை மூடப்பட்டது. இதனால் இவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு மேரி தனது அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் 2 பேரும் மது குடித்து இருந்ததற்கான அடையாளம் இருந்தது.
இது குறித்து காதலனிடம் நடத்திய விசாரணையில் வேலை இல்லாத சூழலில் வருமானம் கிடைக்காததால் தங்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது என்றும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பின்னர் தள்ளிப்போனது என்றும் தெரிவித்தார்.
சொந்த ஊருக்கு செல்ல பணம்கூட கிடைக்காததால் விரக்தியில் இருந்த மேரி தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இருந்தபோதும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகள் மேரி (வயது24). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொடைக்கானலில் மசாஜ் சென்டருக்கு வேலைக்கு வந்தார்.
அதே சென்டரில் வேலை பார்த்து வந்த சுபீஷ் (வயது28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்யாமலேயே ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு அவை மூடப்பட்டது. இதனால் இவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு மேரி தனது அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் 2 பேரும் மது குடித்து இருந்ததற்கான அடையாளம் இருந்தது.
இது குறித்து காதலனிடம் நடத்திய விசாரணையில் வேலை இல்லாத சூழலில் வருமானம் கிடைக்காததால் தங்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது என்றும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பின்னர் தள்ளிப்போனது என்றும் தெரிவித்தார்.
சொந்த ஊருக்கு செல்ல பணம்கூட கிடைக்காததால் விரக்தியில் இருந்த மேரி தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இருந்தபோதும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X