என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரத்தில் சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது
Byமாலை மலர்20 Jan 2021 6:04 AM GMT (Updated: 20 Jan 2021 6:04 AM GMT)
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சிறுமியை கடத்தி கற்பழித்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்:
தாராபுரம் காந்திபுரம் வடதாரை பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 21). இவர் அந்த பகுதியில் வசிக்கும் உறவுப்பெண்ணான 13 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார்.
கடந்த 14-ந்தேதி அந்த சிறுமி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமி மாயமானது பற்றி அவர்கள் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரில் எங்கள் மகளை பிரகாஷ் கடத்திச் சென்று இருக்க வாய்ப்புள்ளது எனவும், எனவே அவரிடம் இருந்து மகளை மீட்டுத்தர வேண்டும் எனவும் கூறி இருந்தனர். அதன்பேரில் போலீசார் சிறுமியை தேடினர்.
இந்தநிலையில் பழனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சிறுமியுடன் பிரகாஷ் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு விசாரித்தனர். அப்போது சிறுமியை, பிரகாஷ் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
சிறுமியை மீட்ட போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தாராபுரம் காந்திபுரம் வடதாரை பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 21). இவர் அந்த பகுதியில் வசிக்கும் உறவுப்பெண்ணான 13 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார்.
கடந்த 14-ந்தேதி அந்த சிறுமி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமி மாயமானது பற்றி அவர்கள் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரில் எங்கள் மகளை பிரகாஷ் கடத்திச் சென்று இருக்க வாய்ப்புள்ளது எனவும், எனவே அவரிடம் இருந்து மகளை மீட்டுத்தர வேண்டும் எனவும் கூறி இருந்தனர். அதன்பேரில் போலீசார் சிறுமியை தேடினர்.
இந்தநிலையில் பழனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சிறுமியுடன் பிரகாஷ் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு விசாரித்தனர். அப்போது சிறுமியை, பிரகாஷ் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
சிறுமியை மீட்ட போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X