என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெண்ணந்தூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டிராக்டர் டிரைவர் பலி
Byமாலை மலர்16 Jan 2021 2:30 PM GMT (Updated: 16 Jan 2021 2:30 PM GMT)
வெண்ணந்தூர் அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி டிராக்டர் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூரை அடுத்த கோம்பைக்காடு பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் கமலேஷ் (வயது 20). பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் தட்சன்காடு வழியாக கோம்பைக்காடு செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தில் மோதி, தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த கமலேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வெண்ணந்தூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பழனிவேல் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X