search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெண்ணந்தூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டிராக்டர் டிரைவர் பலி

    வெண்ணந்தூர் அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி டிராக்டர் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெண்ணந்தூர்:

    வெண்ணந்தூரை அடுத்த கோம்பைக்காடு பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் கமலேஷ் (வயது 20). பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் தட்சன்காடு வழியாக கோம்பைக்காடு செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தில் மோதி, தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த கமலேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வெண்ணந்தூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பழனிவேல் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×