என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே விபத்து- மாணவர்கள் 2 பேர் பலி
Byமாலை மலர்15 Jan 2021 1:53 PM GMT (Updated: 15 Jan 2021 1:53 PM GMT)
கோவை ஆலாந்துறை அருகே நள்ளிரவில் மரத்தில் கார் மோதிய விபத்தில் மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பேரூர்:
கோவை ஆலாந்துறை அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சஞ்சீவிகுமார் (வயது 20). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சஞ்சீவிகுமாரின் உறவினர் வெங்கடாசலம் என்பவரது மகன் அனந்தராமன் (17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று சஞ்சீவிகுமாரின் வீட்டிற்கு அவரது அத்தை வந்து இருந்தார். இரவு அவரை சென்னனூரில் உள்ள வீட்டில் கொண்டு விடுவதற்காக சஞ்சீவிகுமார் காரில் புறப்பட்டார். இதனை பார்த்த அனந்தராமனும் காரில் ஏறிக்கொண்டார்.
அவரை வீட்டில் விட்ட பிறகு சஞ்சீவிகுமார், அனந்தராமன் ஆகியோர் காரில் ஆலாந்துறைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை சஞ்சீவிகுமார் ஓட்டி வந்தார். நள்ளிரவு 12 மணியளவில் கார் கோவை- சிறுவாணி ரோட்டில் தண்ணீர் பந்தல் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இடது புறத்தில் நின்று வாகை மரத்தின் மீது பலத்த சத்தத்துடன் மோதியது.
இதில் சஞ்சீவிகுமார், அனந்தராமன் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் சஞ்சீவிகுமார், அனந்தராமன் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை ஆலாந்துறை அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சஞ்சீவிகுமார் (வயது 20). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சஞ்சீவிகுமாரின் உறவினர் வெங்கடாசலம் என்பவரது மகன் அனந்தராமன் (17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று சஞ்சீவிகுமாரின் வீட்டிற்கு அவரது அத்தை வந்து இருந்தார். இரவு அவரை சென்னனூரில் உள்ள வீட்டில் கொண்டு விடுவதற்காக சஞ்சீவிகுமார் காரில் புறப்பட்டார். இதனை பார்த்த அனந்தராமனும் காரில் ஏறிக்கொண்டார்.
அவரை வீட்டில் விட்ட பிறகு சஞ்சீவிகுமார், அனந்தராமன் ஆகியோர் காரில் ஆலாந்துறைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை சஞ்சீவிகுமார் ஓட்டி வந்தார். நள்ளிரவு 12 மணியளவில் கார் கோவை- சிறுவாணி ரோட்டில் தண்ணீர் பந்தல் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இடது புறத்தில் நின்று வாகை மரத்தின் மீது பலத்த சத்தத்துடன் மோதியது.
இதில் சஞ்சீவிகுமார், அனந்தராமன் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் சஞ்சீவிகுமார், அனந்தராமன் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X