என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் பிரமுகர் தர்ணா போராட்டம்
Byமாலை மலர்12 Jan 2021 2:39 PM GMT (Updated: 12 Jan 2021 2:39 PM GMT)
கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு நோயால் பாதிக்கப்பட்டு அழுகிப்போன பயிர்களை உடம்பில் தழுவிக் கொண்டு காங்கிரஸ் பிரமுகர் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கயத்தாறு:
கயத்தாறில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் அய்யலுசாமி நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு நோயால் பாதிக்கப்பட்டு அழுகிப்போன பயிர்களை உடம்பில் தழுவிக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் கயத்தாறு தாசில்தார் பாஸ்கரனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீடு வழங்குவதை புறக்கணிப்பதை கண்டித்தும், அவர்களுக்கு 2018- 2019, 2019- 2020- ம் ஆண்டுக்கான பயிர் காப்பீ்டு தொகை இதுவரை பல்வேறு கிராமங்களுக்கு வழங்கவில்லை என்று, அந்த கிராமங்களில் உடனடியாக பயிர் காப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது. அவருடன் கயத்தாறு ஒன்றிய காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை, நகர மகளிர் அணித் தலைவி சுசிலா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X