என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எர்ணாகுளம் அருகே தபால் நிலைய பெண் ஊழியர் வெட்டிக்கொலை
Byமாலை மலர்12 Jan 2021 10:37 AM GMT (Updated: 12 Jan 2021 10:37 AM GMT)
எர்ணாகுளம் அருகே தபால் நிலைய பெண் ஊழியரை வெட்டிக்கொன்ற கள்ளக்காதலன் போலீசில் சரண் அடைந்தார்.
பெரும்பாவூர்:
எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி சியாமளா(வயது 54). தபால் நிலைய ஊழியர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இதற்கிடையில் சியாமளாவுக்கும், காக்கநாடு பகுதியை சேர்ந்த சிவராமன்(56) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து அவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து, தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சிவராமனுடன் பேசுவதை சியாமளா குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மதியம் சியாமளாவின் வீட்டுக்கு சிவராமன் வந்தார். அப்போது வீட்டில் சியாமளாவின் மகளும், மகனும் இல்லை.
பின்னர் தன்னிடம் பேசுவதை குறைத்து கொண்டதற்கான காரணம் குறித்து சியாமளாவிடம் சிவராமன் கேள்வி எழுப்பினார். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சிவராமன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சியாமளா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். தொடர்ந்து சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சியாமளாவின் மகளுக்கு செல்போனில் தகவல் கொடுத்துவிட்டு, பிரவம் போலீஸ் நிலையத்தில் சிவராமன் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார், சியாமளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட சிவராமனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தபால் நிலைய பெண் ஊழியரை கள்ளக்காதலன் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி சியாமளா(வயது 54). தபால் நிலைய ஊழியர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இதற்கிடையில் சியாமளாவுக்கும், காக்கநாடு பகுதியை சேர்ந்த சிவராமன்(56) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து அவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து, தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சிவராமனுடன் பேசுவதை சியாமளா குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மதியம் சியாமளாவின் வீட்டுக்கு சிவராமன் வந்தார். அப்போது வீட்டில் சியாமளாவின் மகளும், மகனும் இல்லை.
பின்னர் தன்னிடம் பேசுவதை குறைத்து கொண்டதற்கான காரணம் குறித்து சியாமளாவிடம் சிவராமன் கேள்வி எழுப்பினார். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சிவராமன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சியாமளா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். தொடர்ந்து சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சியாமளாவின் மகளுக்கு செல்போனில் தகவல் கொடுத்துவிட்டு, பிரவம் போலீஸ் நிலையத்தில் சிவராமன் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார், சியாமளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட சிவராமனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தபால் நிலைய பெண் ஊழியரை கள்ளக்காதலன் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X