என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்10 Jan 2021 1:17 PM GMT (Updated: 10 Jan 2021 1:17 PM GMT)
விளாத்திகுளம் அருகே மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் தாலுகா புதூர் யூனியனுக்கு உட்பட்ட துரைச்சாமிபுரம் மற்றும் கோவில் குமரெட்டியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 2,500 ஏக்கர் அளவில் வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, உளுந்து, வெள்ளைச் சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் விதைக்கப்பட்டு உள்ளன.
தற்போது விளாத்திகுளம், புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அனைத்து விவசாய பயிர்களும் மழைநீரில் மூழ்கி அழுகி வருகிறது.
இதனால் விவசாயிகள் விவசாய பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று துரைச்சாமிபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு துரைச்சாமிபுரம் மற்றும் கோவில்குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கூடி மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X