search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மேட்டுப்பாளையத்தில் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

    மேட்டுப்பாளையத்தில் மன அழுத்தத்தில் இருந்த ஒர்க்‌ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சுதந்தராபுரம் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிஜார்அகமது (வயது 44). இவர் கோத்தகிரி ரோடு பகுதியில் சொந்தமாக ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மதினா பிபி (38) என்ற மனைவியும், முகமதுஅர்சத் (17) மற்றும் ரியாஸ் அகமது (16) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    இந்நிலையில்நேற்று மாலை ஒர்க்‌ஷாப்பில் நிஜார்அகமது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நிஜார்அகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் நிஜார்அகமதுவுக்கு மன அழுத்தம் இருந்துள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவருவதாக போலீசார் கூறினர்.
    Next Story
    ×