search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் மோதியதில் தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்
    X
    கார் மோதியதில் தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்

    கமுதி அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது- ஒருவர் பலி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஒருவர் பலியானார். பைக் தீப்பிடித்து எரிந்தது.
    கமுதி:

    கமுதி அருகே உள்ள அபிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் (49). பத்திர எழுத்தராக பணியாற்றினார்.

    இவர் நேற்று அபிராமத்தில் இருந்து பார்த்திபனூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது பார்த்திபனூர் பகுதியில் இருந்து கமுதி நோக்கி கார் வந்தது.

    அபிராமம் அருகே குடமுருட்டி அய்யப்பன் கோவில் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ராமநாதன் சம்பவ இடத்தில் பலியானார். காரில் மோதிய வேகத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது. காரும் தலைகுப்புற கவிழ்ந்தது. கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து அபிராமம் காவல் நிலையத்தில் ராமநாதனின் அண்ணன் நாகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×