என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சேலம் லாரி டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்1 Jan 2021 2:48 PM GMT (Updated: 1 Jan 2021 2:48 PM GMT)
கர்நாடகாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சேலம் லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் நெத்திமேடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 51) , லாரி டிரைவர். இவருடைய மனைவி மோகனா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் வேலைக்கு சென்றார். இதனால் தனியாக இருந்த மோகனா ஆத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் வெங்கடேஷ் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ் கர்நாடகாவில் விபத்து ஒன்று ஏற்படுத்தி உள்ளார். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு பெங்களூரு கோர்ட்டு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததாக கூறப்படுகிறது. இதை அவர் வீட்டில் யாருக்கும் தெரியப்படுத்தாமல் மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் வெங்கடேஷ் தனது செல்போனில் உள்ள ஆடியோவில், பெங்களூரு கோர்ட்டு விதித்த தண்டனை குறித்தும், இது குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. எனவே இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் அவருடைய தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X