search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரூர் அருகே விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

    8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் அரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம் அரூரில் மலகபாடி, பாப்பம்பாடி, தீர்த்தமலை, நாகம்பட்டி, புதுப்பட்டி, பள்ளிப்பட்டி, ஆகிய கிராமங்கள் வழியாக சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு அந்தந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் அரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள், 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டு 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×