search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    திருப்பூர் அருகே கோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    கோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கேங்மேன் பதவியை ரத்து செய்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருப்பூர் மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்சாரவாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. செயலாளர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். தொ.மு.ச. கவுன்சில் துணைத்தலைவர் ரங்கசாமி கண்டன உரையாற்றினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதையட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×