என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிசம்பர் 23ம் தேதி முதல் மு.க.ஸ்டாலின் நேரடி பிரசாரம்
Byமாலை மலர்20 Dec 2020 5:40 AM GMT (Updated: 20 Dec 2020 9:49 AM GMT)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தின்போது 16000 கிராமசபை கூட்டங்களை நடத்த விரும்புவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட, மாநகர செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டம் முடிந்ததும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் ஏராளமான தொண்டர்கள் அண்ணா அறிவாலய வளாகத்தில் குவித்துள்ளனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில், திமுக ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.
டிசம்பர் 23ம் தேதியில் இருந்து மு.க.ஸ்டாலின் நேரடி பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும், இந்த பிரசாரத்தின்போது 16000 கிராமசபை கூட்டங்களையும் நடத்த விரும்புவதாகவும் துரைமுருகன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X