என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணிக்கு சைக்கிளில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
Byமாலை மலர்17 Dec 2020 5:55 AM GMT (Updated: 17 Dec 2020 5:55 AM GMT)
குமரி கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அரசு வாகனத்தில் வருவதை தவிர்த்து சைக்கிளில் வந்தது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சாம்சன். இவர் இயற்கையை காப்பதிலும், சுற்றுச்சூழலை பேணுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதற்காக இவர் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை நடத்தியுள்ளார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் பணியாற்றினார். பின்னர் நெல்லை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது குமரி மாவட்டத்துக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ள இவர் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (ரெட்ஸ்டார்) கட்சியினரின் மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி இன்ஸ்பெக்டர் சாம்சன் அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டார். இதற்காக அவர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு சீருடையில் சைக்கிளில் வந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அரசு வாகனத்தில் வருவதை தவிர்த்து சைக்கிளில் வந்தது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. சக போலீசாரும் சாம்சன் சைக்கிளில் வந்ததைப் பார்த்து அதிசயித்தனர். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, சைக்கிளில் செல்வதன்மூலம் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது. நல்ல உடற்பயிற்சியும்கூட. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிள் பயணம் உறுதுணையாக இருக்கும் என்றார்.
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சாம்சன். இவர் இயற்கையை காப்பதிலும், சுற்றுச்சூழலை பேணுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதற்காக இவர் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை நடத்தியுள்ளார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் பணியாற்றினார். பின்னர் நெல்லை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது குமரி மாவட்டத்துக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ள இவர் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (ரெட்ஸ்டார்) கட்சியினரின் மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி இன்ஸ்பெக்டர் சாம்சன் அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டார். இதற்காக அவர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு சீருடையில் சைக்கிளில் வந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அரசு வாகனத்தில் வருவதை தவிர்த்து சைக்கிளில் வந்தது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. சக போலீசாரும் சாம்சன் சைக்கிளில் வந்ததைப் பார்த்து அதிசயித்தனர். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, சைக்கிளில் செல்வதன்மூலம் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது. நல்ல உடற்பயிற்சியும்கூட. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிள் பயணம் உறுதுணையாக இருக்கும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X