என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராசிபுரம் அருகே மாணவர்கள்-விவசாயிகள் சாலை மறியல் - 14 பேர் கைது
Byமாலை மலர்5 Dec 2020 9:15 AM GMT (Updated: 5 Dec 2020 9:15 AM GMT)
ராசிபுரம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள் சங்கத்தினர், விவசாயிகள் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராசிபுரம்:
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலாவில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினர். இதில் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
சாலை மறியலில் ஈடுபட்டதாக இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பெருமாள், அய்யாதுரை உள்பட 14 பேரை ஆயில்பட்டி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை மெட்டாலாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மாணவர்கள், விவசாயிகளின் மறியல் போராட்டம் காரணமாக ஆத்தூர்-ராசிபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X