என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புயல் முன்னெச்சரிக்கை குறித்து கடற்கரை கிராமங்களில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
Byமாலை மலர்4 Dec 2020 1:11 PM GMT (Updated: 4 Dec 2020 1:11 PM GMT)
குமரி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கடற்கரை கிராமங்களில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் ‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபிநபு ஆய்வு மேற்கொண்டார். அவர் கன்னியாகுமரி, சின்னமுட்டம், மணக்குடி மற்றும் கடற்கரை கிராம பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் பார்வையிட்ட போது அங்குள்ள மீனவர்களிடம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
மேலும், போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் புயல் நேரங்களில் பாதுகாப்பாக சிறப்பான முறையில் பணி செய்யும் படியும் அறிவுரை கூறினார். கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடமும் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X