என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விளாத்திகுளத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் - 38 பேர் கைது
Byமாலை மலர்3 Dec 2020 2:46 PM GMT (Updated: 3 Dec 2020 2:46 PM GMT)
அரசு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் நடத்தினர்.
அரசு உதவித்தொகையை தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களை போன்று குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும், தனியார் துறைகளில் குறைந்தபட்சம் 5 சதவீதம் பணிகளை மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி வழங்க வேண்டும், 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசுத்துறை பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க மாவட்ட பொருளாளர் புவிராஜ் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், மலைக்கனி, மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட 14 பெண்கள் உட்பட 38 பேரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்து விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் தங்க வைத்தனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எம்.சக்கரையப்பன் தலைமை தாங்கினார். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் உமா சங்கர் உள்ளிட்ட 60 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X