search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரெவி புயல்
    X
    புரெவி புயல்

    புரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது

    புரெவி புயல் நள்ளிரவு திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்து, நாளை பிற்பகல் பாம்பன் வந்து, அதன்பின் நள்ளிரவு முதல் டிச.4 அதிகாலை வரை கரையை கடக்கிறது.
    வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இன்று நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது திருகோணமலையில் இருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 70 கி.மீட்டர் தூரதத்தில் மையம் கொண்டுள்ளது. 13 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் திருகோணமலை வடக்கே கரையை கடக்கிறது.

    கரையை கடக்கும் புரெவி புயல், அதன்பின் நாளை பிற்பகல் பாம்பன் வருகிறது. அதன்பின் நாளை நள்ளிரவு முதல் டிசம்பர் 4-ந்தேதி அதிகாலை வரை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கிறது.
    Next Story
    ×