என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணியம்பாடியில் மணல் கடத்திய 5 பேர் கைது
Byமாலை மலர்2 Dec 2020 9:23 AM GMT (Updated: 2 Dec 2020 9:23 AM GMT)
வாணியம்பாடியில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானம் பாலாற்றில் மணல் கடத்துவதாக வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்றுமுன்தினம் இரவு வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மணல் கடத்திவந்த 4 மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். உடனே மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா கொடுத்த புகாரின்பேரில் வாணியம்பாடி தாலூகா போலீசார் நேற்று அதே பகுதியை சேர்ந்த அன்பரசன், ஆதவன், சின்னராஜ், கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதே போல் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் துணைபோலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணல் கடத்தி வந்த சரவணன் என்பவரை கைது, செய்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X