என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாழக்குடியில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்1 Dec 2020 12:50 PM GMT (Updated: 1 Dec 2020 12:50 PM GMT)
தாழக்குடியில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
தாழக்குடி விளாங்காட்டுகாலனியை சேர்ந்தவர் உச்சிமாகாளி (வயது 55). இவருக்கு அருள்மணி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. உச்சிமாகாளிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினமும் உச்சிமாகாளி மது போதையில் வீட்டுக்கு வந்தார். அவரை மனைவி அருள்மணி கண்டித்தார். இதனால், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த உச்சிமாகாளி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் மாலையில் தாழக்குடி புத்தனாறு கால்வாய் அருகே உச்சிமாகாளி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அருள்மணி விரைந்து சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உச்சிமாகாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாழக்குடி விளாங்காட்டுகாலனியை சேர்ந்தவர் உச்சிமாகாளி (வயது 55). இவருக்கு அருள்மணி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. உச்சிமாகாளிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினமும் உச்சிமாகாளி மது போதையில் வீட்டுக்கு வந்தார். அவரை மனைவி அருள்மணி கண்டித்தார். இதனால், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த உச்சிமாகாளி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் மாலையில் தாழக்குடி புத்தனாறு கால்வாய் அருகே உச்சிமாகாளி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அருள்மணி விரைந்து சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உச்சிமாகாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X