search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை

    பல்லடத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    பல்லடம்:

    திண்டுக்கல்லை சேர்ந்த குமார். இவருடைய மனைவி பாண்டிமீனா (வயது 32). குமார் பல்லடம் அருகே உள்ள சேட பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல்லில் உறவினர் பெண்ணுடன் பாண்டிமீனாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணவரிடம் போனில் சொல்லியுள்ளார். உறவினர் பெண்ணை விசாரிப்பதாக சொன்ன அவர் சரிவர விசாரிக்காததால், கணவரைப் பார்க்க பாண்டிமீனா பல்லடம் வந்துள்ளார். கணவரிடம் உறவினர் பெண்ணை போனில் பேசி கண்டிக்குமாறு கூறியுள்ளார்.

    ஆனால் அவர் உறவினர் பெண்ணை கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பாண்டிமீனா கணவர் வேலைக்கு சென்ற பின் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். வீடு திரும்பிய அவரது கணவர். மனைவி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் பாண்டி மீனாவை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×