search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

    திருச்சி விமான நிலையத்தில் உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    செம்பட்டு:

    திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானம் நேற்று காலை 5.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தில் வந்த பயணிகளை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த மகேஷ் (வயது 32) தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×