என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்- இன்றும், நாளையும் நடக்கிறது
Byமாலை மலர்21 Nov 2020 6:29 AM GMT (Updated: 21 Nov 2020 6:29 AM GMT)
வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
கரூர்:
கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம்(தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2020-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டு கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக அடுத்த மாதம்(டிசம்பர்) 15-ந்தேதி வரை வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் தங்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 2021 ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர்களாக பதிவு செய்யத் தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், http://www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் VoterHelpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம்(தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2020-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டு கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக அடுத்த மாதம்(டிசம்பர்) 15-ந்தேதி வரை வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் தங்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 2021 ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர்களாக பதிவு செய்யத் தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், http://www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் VoterHelpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X