search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நீடாமங்கலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நீடாமங்கலம்:

    தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நீடாமங்கலம் வட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வசந்தன், வட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள மாநில நிதிக்குழு தொகையினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிர்வாகத்தொகை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் இதன் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் உரிய நாளில் ஊதியம் வழங்க வேண்டும். இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி பொறியாளர், ஒன்றிய பொறியாளர் பதவி உயர்வு ஆணைகளை உடனே வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×