search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆழியான் வாய்க்காலின் மதகு உடைப்பு
    X
    ஆழியான் வாய்க்காலின் மதகு உடைப்பு

    ஆழியான் வாய்க்காலின் மதகு உடைப்பு: விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை - விவசாயிகள் தவிப்பு

    கும்பகோணம் அருகே அழகாபுத்தூர் பகுதியில் உள்ள அரசலாற்று கிளை வாய்க்காலின் மதகு உடைந்துள்ளதால் விவசாயத்திற்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே அழகாபுத்தூர் பகுதியில் உள்ள அரசலாற்று கிளை  வாய்க்காலின் மதகு உடைந்துள்ளதால் விவசாயத்திற்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. கிளை வாய்க்கால்கள் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று விவசாயம் நடைபெற்று வரும் நிலையில்,  ஆழியான் வாய்க்காலின் மதகு அழகாபுத்தூர் பகுதியில் உடைந்துள்ளது.

    மழைக்காலம் என்பதால் இதுபோன்ற பழுதுகள் தொடராமல் இருக்க காவிரி பாசன பகுதியை கண்காணிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×