search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

    பெரம்பலூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த நொச்சியம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. விவசாயி. இவரது மகன் அருள்ஜோதி (வயது 23). இவர் படித்து விட்டு தனது தந்தைக்கு உதவியாக விவசாய வேலை செய்து வந்தார். இந்தநிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அருள்ஜோதி, மதுபானத்தில் பூச்சி மருந்தை(விஷம்) கலந்து குடித்து விட்டார்.

    இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் பெரம்பலூர் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருள்ஜோதி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் வழக்குப்பதிவு செய்து அருள்ஜோதி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
    Next Story
    ×